search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் மாநகராட்சி"

    திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் வினய் ஆய்வு மேற்கொண்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் பழமையான ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க திட்ட பிரதான மற்றும் பகிர்மான குழாய்களை புனரமைப்பு செய்து தினசரி குடிநீர் வழங்கும் வகையில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு இணைய நிதி மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி நிதியின் கீழ், ரூ.70.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 3 எண்ணம் மற்றும் 10 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி 1 எண்ணம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆத்தூர் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து 22 கி.மீ நீளத்திற்கு பிரதான குழாய் பதிக்கும் பணி, 235 கி.மீ நீளத்திற்கு பகிர்மான குழாய் பதிக்கும் பணி மற்றும் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 98 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது. இத்திட்டம் முடிவுற்றபின் நகருக்கு தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், சாலை வசதியை பொருத்தவரையில் தமிழ்நாடு நகர்புறச்சாலை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம் - 2017-18ன் கீழ் 18.00 கி.மீ நீளமுள்ள தார்சாலை, 4.00 கி.மீ நீளமுள்ள பேவர்பிளாக் கற்கள் சாலை என மொத்தம் 22.00 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு, பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் அபிவிருத்தி பணிகளால் சேதாரமடைந்த சாலைகள் மற்றும் நகரின் முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும், திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் காய்கறி கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையம் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்திட்டம் 2013-14ன் கீழ், செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டர் ஆபீசில் முற்றுகையிட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கேதையறும்பு ஊராட்சி பொது மக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் தங்களது பகுதியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி குப்பையையும், திண்டுக்கல் மாநகராட்சியில் இருந்து வெளியேறும் குப்பைகளையும் கொட்டுவதாக புகார் தெரிவித்தனர்.

    இந்த குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை செய்யாமல் உள்ளது. இது குறித்து கிராம சபை கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியும் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிணறுகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தனர்.

    திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை யூனியன் குளத்தூர் கிராமம் விராலிபட்டி ஏ.டி. காலனியை சேர்ந்த மக்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கூறுகையில் எங்களது பகுதியில் கடந்த 4 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை. சுமார் 75 குடும்பங்களும் நீண்ட தூரம் சென்றும், விலைக்கு வாங்கியும் தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம்.

    வடமதுரை வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு இதுகுறித்து புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவேண்டும் என்றனர்.

    திண்டுக்கல் நாகல் நகர் 34-வது வார்டு குருநகரை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் கால்வாய் வசதி, சாலை வசதி, உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்றும், சுடுகாடு காம்பவுண்டு சுவரை இடித்து தருமாறும் மனு அளித்தனர். #tamilnews

    ×